Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

ADDED : ஜூன் 04, 2024 04:18 AM


Google News
கள்ளக்குறிச்சி : நயினார்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரியைச் சேர்ந்தவர் அமாவாசை மகன் சிவபெருமாள், 29; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்றார்.

நள்ளிரவு 12:45 மணியளவில் நயினார்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிவபெருமாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சிவபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us