ADDED : ஜூன் 04, 2024 04:18 AM
கள்ளக்குறிச்சி : நயினார்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரியைச் சேர்ந்தவர் அமாவாசை மகன் சிவபெருமாள், 29; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்றார்.
நள்ளிரவு 12:45 மணியளவில் நயினார்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிவபெருமாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சிவபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.