Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

ADDED : ஜூன் 04, 2024 04:18 AM


Google News
கள்ளக்குறிச்சி, : புதுஉச்சிமேடு அருகே முனியப்பன் கோவிலில் உள்ள 2 உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராயப்பன், 57; இவர், பட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். கடந்த 2ம் தேதி காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, உண்டிலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us