ADDED : மார் 14, 2025 07:42 AM
கள்ளக்குறிச்சி: உடல் நிலை பாதிப்பால் முதியவர் பூச்சு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் சேர்ந்தவர் தர்மன்,72; உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி வலி அதிகரித்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சு மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.