ADDED : ஜூன் 03, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் புதுக்குட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் கார் டியூப்பில் பதுக்கி வைத்து, சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி, 55; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.