ADDED : ஜூன் 16, 2024 10:20 PM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவலுாரில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குளத்து மேட்டு பகுதியில் உள்ள பங்க் கடையில் சோதனை செய்ததில், குட்கா விற்றது தெரியவந்தது.
உடன் 27 பாக்கெட்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, பிபிஜான், 65; என்பவரை கைது செய்தனர்.