ADDED : ஜூன் 16, 2024 10:19 PM
கள்ளக்குறிச்சி : வாணியந்தல் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜய்ராகவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வாணியந்தல் ஏரிக்கரையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
போலீசை பார்த்ததும் 3 பேர் தப்பியோடினர். தொடர்ந்து, அங்கிருந்த ராஜா, 43; அருள்பாண்டியன், 29; அருண்குமார் ,24; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய ராஜா, அய்யனார், அய்யனார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.