Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம்

ADDED : ஜூலை 04, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.

எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கினார். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக வழங்கப்படும் புகாரில், காவல் நிலையங்களில் முறையான தீர்வு கிடைக்கவில்லை என, 19 புகார்தாரர்கள் மனு அளித்தனர். மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது.

அனைத்து காவல் நிலையங்களிலும், பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.எஸ்.பி., ஜெயபால், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us