Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்த மனைவி கொலை; உளுந்துார்பேட்டை அருகே கணவர் உட்பட 2 பேர் கைது

கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்த மனைவி கொலை; உளுந்துார்பேட்டை அருகே கணவர் உட்பட 2 பேர் கைது

கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்த மனைவி கொலை; உளுந்துார்பேட்டை அருகே கணவர் உட்பட 2 பேர் கைது

கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்த மனைவி கொலை; உளுந்துார்பேட்டை அருகே கணவர் உட்பட 2 பேர் கைது

ADDED : ஜூலை 05, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அ.குறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி, 33; இவரது மனைவி தெய்வானை, 28; இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இருவரும் கேரளாவுக்கு சென்று கூலி வேலை செய்து வந்தனர். வேலைக்குச் சென்ற இடத்தில் தெய்வானைக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது. இதனையறிந்த வீரமணி தெய்வானையை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கள்ளக்காதலை தொடர்ந்தார்.

கடந்த 15 தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி, மனைவி தெய்வானையை கட்டையால் தாக்கினார். பலத்த காயமடைந்த தெய்வானையை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தெய்வானை இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வீரமணியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சதீஷ், 36 என்பவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us