ADDED : ஜூன் 10, 2024 01:03 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ரோந்து சென்றார்.
அப்போது அங்குள்ள வெங்கோடு கிராமத்தில் கஞ்சா விற்ற ஆண்டி மகன் முத்து, 39; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.