Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சலவை தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

சலவை தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

சலவை தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

சலவை தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

ADDED : ஜூன் 10, 2024 01:03 AM


Google News
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சலவை தொழிலாளி துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜா, 49; சலவை தொழிலாளி. திருமணமாகி சுமதி, 45; என்ற மனைவியும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். ராஜா குடிப்பழக்கம் உள்ளவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு சென்றவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். ஊருக்கு வந்தது முதல் மீண்டும் குடித்துக் கொண்டே இருந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த ராஜா, வீட்டில் துாக்கு போட்டு இறந்தார்.

புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us