ADDED : ஜூன் 09, 2024 03:55 AM
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 700 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கரியலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, புதுார் காட்டுகொட்டாய் பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, பேரல்களில் இருந்த 700லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
மேலும், இது தொடர்பாக புதுார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அண்ணாமலை என்பவர் மீது கரியலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.