உளுந்துார்பேட்டை: எறையூர் ஜெபமாலை அன்னை ஆலய 154ம் ஆண்டு தேரோட்டம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 21ம் தேதி ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி பிரார்த்தனை நடந்தது.
கடந்த 30ம் தேதி இரவு 10:00 மணியளவில் தேர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தைச் அடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.