/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கோவில்கள் இடித்து அகற்றம்

ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து கோவில்களை இடித்து அகற்றும் பணி நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. அப்போது, அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சுவாமி சிலைகளை அகற்ற கால அவகாசம் கேட்டனர். மேலும், கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி கோவிலுக்குள் அமர்ந்தனர். காலஅவகாசம் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்ததை தொடர்ந்து, கோவிலினுள் அமர்ந்திருந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
சிலைகள் அகற்றம்
தொடர்ந்து, சக்தி விநாயகர் கோவிலில் இருந்த (கல்-6, உலோகம்-3) 9 சுவாமி சிலைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சிலைகளின் உயரம், அகலம், எடை ஆகியவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மினி டெம்போவில் ஏற்றி, பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். சுவாமிக்கு சாற்றப்படும் வெள்ளி கவசங்கள், மணி உள்ளிட்ட உபகரணங்களை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில் இடிப்பு
தொடர்ந்து, நேற்று மதியம் 1:00 மணியளவில் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சக்தி விநாயகர் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது.
போக்குவரத்து மாற்றம்
கோவில்கள் இடிப்பு பணியையொட்டி, கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நோக்கி சென்ற வாகனங்களை மவுண்ட்கார்மல் கரியப்பா நகர் வழியாக திருப்பி விடப்பட்டது.