Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்

கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்

கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்

கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்

ADDED : ஜூன் 09, 2025 03:25 AM


Google News
கோபி: தாளவாடி, சத்தி, நம்பியூர், கோபி, அந்தியூர், பவானி ஆகிய ஆறு தாலுகாவை உள்ளடக்கிய விவசாயிகளுக்கு, கோட்ட அளவி-லான வேளாண் குறைதீர் கூட்டம், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில், மாதந்தோறும் இரண்டாவது வாரம் செவ்வாய்க்கிழமை மதியம், 3:00 மணிக்கு நடந்தது. இந்த நேரத்துக்கு கூட்டம் நடப்பதால், கறவை மாடு வைத்திருப்போர், பால் கறக்கும் பணி பாதிப்பதாக தெரிவித்து, நேரத்தை மாற்றுமாறு வலியுறுத்தினர். இதை ஏற்று நடப்பு மாத வேளாண் குறைதீர் கூட்டம், வரும், 10ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கும் என்று கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் அறிவித்துள்ளார்.

நேரம் மாறினாலும் ஏமாற்றமே...கூட்டம் நடக்கும் நேரத்தை மாற்றினாலும், கூட்டத்தால் எவ்-வித பலனும் இல்லை என்று, விவசாயிகள் வேதனை தெரிவிக்-கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கோபி கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், சம்பிரதாயத்துக்காக மட்-டுமே நடத்துகின்றனர்.

இதுவரை கொடுத்த எந்த மனு மீதும் நடவடிக்கை இல்லை. இதனால் கூட்டத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்தபடியே உள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்துக்கு ஐந்து பேர் மட்டுமே வந்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்-தால்தானே, விவசாயிகளும் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு கூறினார். நேரத்தை மாற்றிய ஆர்.டி.ஓ., சிவானந்தம், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் ஏமாற்றத்துக்கும் விடை

கொடுப்பாரா?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us