ADDED : ஜூன் 09, 2025 03:24 AM
ஈரோடு: அக்னி வெயில் கடந்த மாதம் நிறைவு பெற்றாலும், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் இன்னும் விடை பெறவில்லை என்றே தோன்றுகிறது.
கடந்த சில நாட்க-ளாக, அக்னி நட்சத்திர காலத்தை விட கூடுதலாக வெயில் வாட்டு-கிறது. இதனால் பகலில் வீடுகளில் மக்கள் முடங்குகின்றனர். தினமும், ௧௦௦ டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிறது. மழையும் இல்லாததால், இரவில் புழுக்கம் அதிகரித்து, மக்களின் துாக்-கத்தை பறிக்கிறது. நேற்று, 39.2 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி பாரன்ஹீட்) வெயில் சுட்டெரித்தது. ஈரோட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை கவலை அடைய
செய்துள்ளது.