Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ADDED : ஜூன் 09, 2025 03:23 AM


Google News
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை முருகன் கோவிலில், முருகப்பெரு-மானின் அவதார தினமான வைகாசி விசாக விழா, ௬௯வது ஆண்-டாக நேற்று மாலை கோலாகலமாக நடந்தது.முன்னதாக காலை, 10:௦௦ மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு, மலை கோவிலை அடைந்தது. இதை தொடர்ந்து மதியம், 3:௦௦ மணிக்கு கணபதி ேஹாமத்-துடன் விழா துவங்கியது.

கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து, 4:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பல்வேறு அபி-ஷேகம் செய்து, 6:30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்-தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய

தொடங்கினர்.

காங்கேயம் அருகேயுள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள், காவடி தீர்த்த குடங்களுடன், மாலையில் வருகை தந்து முருகப்-பெருமானை வழிபட்டு

சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us