Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை 2 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை 2 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை 2 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை 2 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 10, 2025 01:11 AM


Google News
ஈரோடு, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தலைமையில், நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர், ஈரோடு கோட்ட அலுவலகம், 948-ஈ.வி.என்., சாலை, ஈரோடு - 9' என்ற முகவரியில் நடக்கிறது.

இதில் சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.

பவானி பகுதிக்கு...

கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், பவானி பகுதி மின் நுகர்வோருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மேட்டூர் மெயின்ரோட்டில், ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பவானி கோட்ட நுகர்வோர் பங்கேற்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us