Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு

பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு

பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு

பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு

ADDED : செப் 04, 2025 01:53 AM


Google News
ஈரோடு, ஈரோடு பி.எஸ்.என்.,எல்., பொது மேலாளர் சிவ் ஷங்கர் சச்சன் வெளியிட்ட செய்திக்

குறிப்பில் கூறியிருப்பதாவது:

பி.எஸ்.என்.எல்., சார்பில் சுதந்திர தின திட்டம் ஆக., 1ல் அறிமுகம் செய்யப்பட்டது. பி.எஸ்.என்.எல்.,ன் '4ஜி' சேவை ஒரு மாதத்துக்கு, இலவசமாக சோதித்து பார்க்கவும், வரையறுக்கப்பட்ட காலத்துக்கு, 1 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. உள் நாட்டில் உருவாக்கப்பட்ட '4ஜி'யை அளிக்கிறது.

வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்பு, தினமும், 2 ஜி.பி., அதிவேக டேட்டா, தினமும், 100 எஸ்.எம்.எஸ்., - ஒரு சிம் இலவசமாக கிடைக்கும். இச்சலுகையை வரும், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம்.

'மேக் இன் இந்தியா' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, நாடு முழுவதும், ஒரு லட்சம் '4ஜி' தளங்களை நிறுவி வருகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us