ADDED : செப் 04, 2025 01:52 AM
பவானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம் பஞ்.,ல், 33.50 லட்சம் மதிப்பில், அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தை திருப்பூர் எம்.பி.,சுப்பராயன் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதே போல், அதே பகுதியில், கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.