Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்

ADDED : ஜூலை 29, 2024 01:25 AM


Google News
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் செல்லும் வழியில், நேற்று அதி-காலை இரு யானைகள், இரண்டு குட்டிகளுடன் மல்லியம்மன் கோவில் அருகில் உலா வந்தது.

அரை மணி நேரம் சாலையில் அங்குமிங்கும் நடமாடிய நிலையில், வனப்பகுதிக்குள் சென்றன. அப்போது வாகனத்தில் வந்தவர்கள், யானைகள் நடமாடியதை, மொபைல் போனில் படம் எடுத்தனர்.

வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி சாலையை கடந்து செல்-லும்போது, வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. அதிக ஒலி எழுப்ப கூடாது. வாகனங்களை நிறுத்தி போட்டோ வீடியோ எடுக்க கூடாதென்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us