Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்

தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்

தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்

தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்

ADDED : ஜூலை 08, 2024 07:10 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. எந்தந்த ஊராட்சிகளை தரம் உயர்த்-தலாம், எந்தெந்த ஊராட்சிகளை அருகேயுள்ள மாநகராட்சியுடன் இணைக்கலாம் என்பது குறித்த ஆய்வும் நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது: ஊராட்சி-களை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் கை நழுவும் என்றாலும், வார்டுகளில் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த முடியும். ஆனால், அருகில் உள்ள நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், மக்கள் பாதிக்கப்படுவர். ஊராட்சிகளுக்கு நேரடியாக கிடைத்து வந்த மத்திய அரசு திட்டங்-களும், நிதியும் தடைபடும்; வரியினங்கள் அதிகரிக்கும். எனவே, பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்கலாம். மாறாக, தரம் உயர்த்துவதால், மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் உட்கட்ட-மைப்பு மேம்படுமா என்பது சந்தேகமே. இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us