Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்

தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்

தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்

தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்

ADDED : ஜூலை 08, 2024 07:10 AM


Google News
சத்தியமங்கலம், : ஈரோடு மாவட்டம் ஆசனுார் அருகே, தொட்டபுரம் வனப்பகு-தியில் கடந்த ஜூன், 26ம் தேதி, வனத்துறை பணியாளர்கள் ரோந்து சென்றபோது, மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர்கள் தகவலின்படி ஆசனுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொட்டபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ரங்கசாமி மனைவி முத்துமணி, ௪௩; இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கூலி தொழி-லாளி குமார், ௪௦, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை மகன் நாகமல்லு கண்டித்தும் முத்துமணி தொடர்ந்தார்.

இந்நிலையில் மே மாதம், 27-ம் தேதி இரவு முத்துமணி, குமார் ஒன்றாக இருந்ததை நாகமல்லு பார்த்துள்ளார். இதனால் ஆத்திர-மடைந்தவர், சித்தப்பா மகன் மாதவனுடன் சேர்ந்து, கட்டையால் அடித்து குமாரை கொன்றார். பிறகு உடலை வனப்பகுதிக்குள் வீசி சென்றது விசாரணையில் தெரிந்தது. நாகமல்லு, 25, முத்து-மணி, 43, மாதவன், 24, ஆகியோரை, ஆசனுார் போலீசார் கைது செய்தனர். சத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்-தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us