/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம் பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 24, 2024 08:14 AM
ஈரோடு, : வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், சர்.சி.வி.ராமன் கருத்தரங்கு கூடம், எஸ் அன்ட் எச்., பிளாக்கில் வரும், 29ம் தேதி நடக்கிறது.
அன்று காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்கள்; மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன் பெற, ஈரோடு மண்டல வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.