ADDED : மார் 17, 2025 05:57 AM

சின்னாளபட்டி, : பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சின்னாளபட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
முன்னதாக திரவிய அபிஷேகத்துடன், அம்மனுக்கு ஆயிரம் கண் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயில், தேவி கருமாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.