Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மூதாட்டியிடம் நகைபறிப்பு

மூதாட்டியிடம் நகைபறிப்பு

மூதாட்டியிடம் நகைபறிப்பு

மூதாட்டியிடம் நகைபறிப்பு

ADDED : மார் 17, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
வேடசந்துார்: வேடசந்துார் நேருஜி நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பழனியப்பன் 75.

இவரது மனைவி சிவானந்தம் 68. இருவரும் தங்களது வீட்டில் வசித்த நிலையில் பழனியப்பன் வேலை விஷயமாக வெளியில் சென்றார். வீட்டில் சிவானந்தம், மட்டும் தனியாக இருந்தார். நேற்று மதியம் 2:00 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், சிவானந்தத்தை, கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தாலி செயினை அறுத்தார்.

பாதி அறுபட்ட நிலையில் மீதி நகை கீழே விழுந்தது. காதிலிருந்த கம்மலை காதோடு சேர்த்து பறித்துகொண்ட இளைஞர் தப்பி ஓடும் போது கம்மலும் தவறி கீழே விழுந்தது. ரத்தம் கொட்டிய நிலையில் சிவானந்தம், சத்தமிட்டதை பார்த்த அப்பகுதியினர் அங்கு குவிந்தனர். வேடசந்துார் எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us