/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம் பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்
பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்
பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்
பாதை வசதியற்ற கன்னிவாடி ஆல்டா குடியிருப்பு ஓடை வழித்தடமும் புதர் மூடிய அவலம்

புதர் மண்டிய பாதை
பொ.குமார்,கூலித்தொழிலாளி : 19 ஆண்டுகளாக பாதை வசதிக்காக அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. குடியிருக்க அனுமதித்து பல ஆண்டுகளாகியும் பட்டா வழங்கவில்லை. சீப்பாலத்து கன்னிமார் ஓடை வழியே குண்டும் குழியுமான தடத்தில் பயணிக்கிறோம். டூவீலர்கள் மட்டுமின்றி பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாமல் கரடுமுரடான வழித்தடமாக உள்ளது. தற்போது இந்த ஓடையின் பெரும்பகுதி புதர் மண்டியுள்ளது. முதியோர், கர்ப்பிணிகள் அவசரகால சிகிச்சைக்கு செல்லவும் வழித்தடம் இல்லை.
இருளால் அவதி
கு. சந்திரலேகா,குடும்பத்தலைவி : போதிய வருவாய் ஆதாரமற்ற நிலையில் தினக்கூலி பணிக்காக இங்கிருந்து தினமும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னிவாடிக்கு செல்கின்றனர். போக்குவரத்து வசதி முக்கிய பிரச்னை. இப்பகுதியில் மின்தடை நேரங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இங்குள்ள ஒரு ஆழ்துளை கிணறு, தண்ணீர் வசதி இருந்தும் பயன்பாடின்றி மூடி வைத்துள்ளனர். கை பம்பு அமைத்தால் உதவியாக இருக்கும். போதிய சாக்கடை வாறுகால் இல்லை. தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. க்ஷமழை காலங்களில் துர்நாற்றத்துடன் சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கூடுதல் தெருவிளக்கு தேவை. பள்ளி மாணவர்கள், மாலை நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் அச்சத்துடன் வீடு திரும்புகின்றனர்.
சிரமப்படும் மாணவர்கள்
வீரலட்சுமி ,குடும்பத்தலைவி : மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர 4 வழிச்சாலையை கடந்து செல்வதில் பாதை வசதியின்றி சிரமப்படுகின்றனர். போதிய பாதுகாப்பற்ற சூழலில் அச்சத்துடன் வசிக்கிறோம். மழைக்காலத்தில் ஓடையில் தண்ணீர் செல்லும் போது வேலைக்காக வெளியில் செல்ல பாதை வசதி இல்லை. கூடுதல் தெருவிளக்கு இல்லாமல் விஷப் பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கும் அவலநிலை தொடர்கிறது என்றார். -