Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அனைத்து மக்களையும் ஆதரிப்பது காங்., வேணுகோபால் ராவ் பேட்டி

 அனைத்து மக்களையும் ஆதரிப்பது காங்., வேணுகோபால் ராவ் பேட்டி

 அனைத்து மக்களையும் ஆதரிப்பது காங்., வேணுகோபால் ராவ் பேட்டி

 அனைத்து மக்களையும் ஆதரிப்பது காங்., வேணுகோபால் ராவ் பேட்டி

ADDED : டிச 01, 2025 12:51 AM


Google News
வத்தலக்குண்டு: ''பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., போன்று இந்தியாவை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தாமல் அனைவருக்கும் பொதுவான இயக்கமாக காங்., உள்ளது,'' என, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தமிழக காங்., மேலிட பார்வையாளர் வேணுகோபால் ராவ் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: மாவட்ட காங்., கமிட்டி தலைவர் தேர்வை கிராமம், வட்டாரம், தொகுதி, மாவட்டம் என அனைத்து நிர்வாகிகளின் கருத்தை கேட்டு நடத்த அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அகமதாபாத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் தலைவர் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த இயக்கத்திற்குள் எந்த ஒரு தனிப்பட்ட குரூப் அரசியலுக்கும் இடமில்லை. அனைவரையும் அரவணைத்து, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலம் இது. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., போன்று இந்தியாவை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தாமல் காங்., செயல்படுகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us