ADDED : டிச 01, 2025 06:05 AM
வடமதுரை: சிங்காரக்கோட்டையில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன் பங்கேற்றனர்.


