/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் அலட்சியம்: தொற்று மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் அலட்சியம்: தொற்று மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் அலட்சியம்: தொற்று மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் அலட்சியம்: தொற்று மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் அலட்சியம்: தொற்று மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
ADDED : ஜூலை 12, 2024 07:50 AM

மக்களின் அடிப்படை தேவைகளாக குடிநீர், கழிப்பறை, சாக்கடைகள் உள்ளன. குடியிருப்பு பகுதி கழிவுகளை தெருக்களில் வீசுவதால் சுகாதாரம் சார்ந்த பல பிரச்னைகள் உருவாகிறது. இதன் பாதிப்பை தவிர்க்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நடைமுறை சிக்கல்களை காரணம் கூறி இதனை முறையாக செயல்படுத்துவதில் அலட்சியம் நீடிக்கிறது. ஆரம்ப காலத்தில் மக்கும், மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வலியுறுத்தப்பட்டது.
இதற்காக உர தயாரிப்பிற்கு பயன்படுத்த ஏதுவாக பல லட்சம் ரூபாயில் இரும்பு குப்பைத்தொட்டிகள் வாங்கப்பட்டன. ஆனால் அடுத்த சில நாட்களிலே இவற்றின் பயன்பாடு முடங்க துவங்கின.
தற்போது பல உள்ளாட்சிகளில் இத்தொட்டிகள் பயன்பாடின்ற குப்பையோடு குப்பையாக மட்க துவங்கி உள்ளன.
துாய்மை காவலர்கள் கழிவுகளை சேகரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். பல இடங்களில் கழிவு அகற்றப்படாமல் குப்பை கழிவுகளில் மூழ்கி கிடக்கின்றன.
சிலர் குப்பைத் தொட்டியிலே கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட குப்பை தரம் பிரித்தல், மண்புழு உர உற்பத்தி கிடங்குகள் பாழடைந்து உள்ளன. மழைக்காலம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் சுகாதாரம் காக்கவேண்டிய திறந்த வெளி குப்பை தொட்டிகள், தரம் பிரித்தல் தொட்டிகள், தற்போது தொற்று நோய் பரப்பும் மையங்களாக மாறி வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் விதத்தை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.