ADDED : ஜூலை 12, 2024 07:51 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.கலைக்கல்லுாரி பொருளாதாரத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது.
பொருளியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கல்லுாரி செயலர் ரெத்தினம்,இயக்குநர் துரை ரெத்தினம் வழிகாட்டுதலின் படி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் பொன்னையா பேசினார். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடந்தது. உதவி பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.