ADDED : ஜூன் 24, 2024 04:35 AM
பழநி : பழநி முருகன் கோவில் கிரிவீதியில் கோவை மாவட்டம் சூலுார் பக்தர்கள் கும்மி யாட்டம் ஆடி கிரிவலம் வந்தனர்.
பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரிவீதியில் கோவை மாவட்டம் சூலுாரைச் சேர்ந்த வள்ளி கும்மியாட்டக் குழுவினர் கும்மியாட்டம் ஆடி கிரிவலம் வந்தனர்.