ADDED : ஜூன் 06, 2025 03:04 AM
பழநி: பழநி கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க நேற்று காலை திருஆவினன்குடி கோயிலில் தகுதியான இரு ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் திருமணம் நடந்தது. ஜோடிகளுக்கு தலா அரைப்பவுன் தங்கத் தாலி, ரூ.50,000 சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.