ADDED : ஜூன் 06, 2025 03:04 AM

பழநி: பழநி துணை மின் நிலையத்தில் 22 கிலோ வோல்ட் மின்பாதை மூலம் ஆயக்குடி, பாலசமுத்திரம் பேரூராட்சிகளுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டது.
இதனால் மின்னழுத்த குறைபாடு ஏற்பட்டது. இந்நிலையில் பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு 22 கிலோ வோல்ட் மின்பாதை புதிதாக ரூ.86 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
இதை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார் .இதனால் 12 கிராமங்கள் இரண்டு பேரூராட்சிகள் தடையில்லா மின்சாரம் பெற முடியும்.