ADDED : ஜூன் 16, 2025 02:11 AM
திண்டுக்கல்: வத்தலக்குண்டு பகுதியில் சமீப நாட்களாக டூவீலர்கள் திருடுவது போலீசார் கவனத்திற்கு வந்தது.
போலீசார் கண்காணிப்பு கேமராக்களை கொண்டு நடத்திய விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட வத்தலக்குண்டு கண்ணகி நகரை சேர்ந்த ஷாருக்கான் 20, ஸ்ரீ சபரி 18, மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மதன் குமார் 21 உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.