ADDED : ஜூன் 16, 2025 02:11 AM
வத்தலக்குண்டு: மதுரை ரோடு உசிலம்பட்டி பிரிவில் வழி தவறி நின்று கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தையை அப்பகுதி இளைஞர் வத்தலக்குண்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
குழந்தையிடம் விவரம் கேட்டபடியே போலீசார் வர, அப்போது தங்கள் பகுதி குழந்தை வருவதைக் கண்டவர்கள் குழந்தை குறித்து விவரம் அளித்தனர்.
விசாரணையில் நாகலாபுரம் சதீஷ்குமார் என்பவரின் குழந்தை என தெரிந்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.