ADDED : ஜூன் 01, 2025 04:01 AM
திண்டுக்கல்: பாலஸ்தீனம், காசா மீது தொடர் போர் நடத்தி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இதற்கு மாவட்டச்செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், எம்.பி., சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் ராணி பேசினர். செயலாளர் அரபுமுகமது நன்றி கூறினார்.