
திண்டுக்கல்,: போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், எந்த பணப்பலங்களையும் வழங்காமல் வெறும் கையுடன் அவர்களை வீட்டுக்கு அனுப்பக்கூடாது என வலியுறுத்தி ,ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திண்டுக்கல் மண்டலம் சார்பில் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் பாலு தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.