Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் ஏமாற்றும் போலி கைடுகள்

பழநியில் ஏமாற்றும் போலி கைடுகள்

பழநியில் ஏமாற்றும் போலி கைடுகள்

பழநியில் ஏமாற்றும் போலி கைடுகள்

ADDED : ஜூன் 02, 2025 12:48 AM


Google News
பழநி: பழநி முருகன் கோயில் அடிவாரம் பகுதிகளில் போலி கைடுகள் தொந்தரவால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

பழநி முருகன் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.

பஸ், ரயில், தனியார் வாகனங்கள் மூலம் வரும் இவர்களை குறிவைத்து போலி கைடுகள் என பலர் சுற்றி வருகின்றனர்.

பழநி கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த விதமாகவும் கைடுகள் நியமிக்கப்படாத நிலையில் வெளி மாநில வெளியூர் நபர்களை கண்டறிந்து ஏமாற்றுகின்றனர்.

போலிநபர்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம். இவர்கள் குறித்து கோயில் நிர்வாகத்திற்கும், போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

டூ வீலர், நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்களை முறையான பார்க்கிங் வசதி இல்லை என திசை திருப்பி பணம் பறித்து ஏமாற்றுகின்றனர். இதனால் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதன் மீது நகராட்சி, போலீசார், கோயில் நிர்வாகத்தினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us