ADDED : செப் 22, 2025 03:33 AM
பழநி : பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.
கோயிலுக்கு செல்ல ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இலவச கார் பார்க்கிங் அனைத்தும் நிரம்பின.