Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று துவங்குகிறது தொழில் கடன் முகாம்

இன்று துவங்குகிறது தொழில் கடன் முகாம்

இன்று துவங்குகிறது தொழில் கடன் முகாம்

இன்று துவங்குகிறது தொழில் கடன் முகாம்

ADDED : ஜூன் 02, 2025 12:45 AM


Google News
திண்டுக்கல்: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் குறு, சிறு ,நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று துவங்கி இம்மாத இறுதி வரை நடக்கிறது.

புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திண்டுக்கல் பாண்டியன் நகர் முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது. இன்று முதல் ஜூன் 30 வரை இந்த முகாம் நடக்கிறது. திண்டுக்கல், தேனி மாவட்ட கடன் இலக்காக ரூ.92 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் தொழில் கடன் திட்டம் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. தகுதி பெறும் தொழில்களுக்கு அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை வரை வழங்கப்படும். விவரங்களுக்கு 99626 22939, 94450 23477 ல் அணுகலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us