/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள் சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள், பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 6 வது வார்டு மக்கள்

ரோடுகள் சரி இல்லை
சதீஷ்குமார், மாநகர பா.ஜ., தலைவர்: ரோடுகள் மேடு, பள்ளமாக உள்ளது. இந்த ரோடுகளை பயன்படுத்தும் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள சில மின்கம்பங்களில் மரங்கள் சாய்ந்து விடுகின்றன. மழைபெய்தால், காற்று கொஞ்சம் பலமாக அடித்தால் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்படுவது மட்டுமல்லாமல், அருகில் உள்ள வீடுகளிலும் கிளைகள் விழுந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய வேண்டும்.
சாக்கடைகளை துார்வாருங்க
வேல்முருகன், சிமென்ட் ரோடு பகுதி : சாக்கடைகள் முறையாக பராமரிக்காததால் மண் சேர்ந்து தேங்கி நிற்கிறது.
குடிநீர் பிரச்னை உள்ளது
முருகேஸ்வரி, பாண்டியன் நகர் : தண்ணீர் பிரச்னை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.
அனைத்தும் சரிசெய்யப்படும்
சரண்யா, கவுன்சிலர் (தி.மு.க.,): சிமென்ட் ரோடு பகுதியில் பேவர் பிளாக் போடப்பட உள்ளது. அதிகபட்சம் 10 நாட்களுக்குள் பணிகள் தொடங்கி விடும். அதற்கு முன்பாக ஓடைகளை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.