ADDED : ஜூலை 31, 2024 04:29 AM
திண்டுக்கல் : கேரளாவில் மழை பெய்து வருவதால் திண்டுக்கல்லுக்கு காலை 8:00 மணிக்கு வரவேண்டிய திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக காலை 10:30 மணிக்கு வந்தது.
காலை 9:00 மணிக்கு வரவேண்டிய பாலக்காடு திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11:00 மணிக்கு வந்தது. ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனர். ரயில்வே நிர்வாகம் தரப்பில் முறையான அறிவிப்புகளும் வராததால் குழப்பத்தில் அங்கும் இங்குமாய் சுற்றித்திரிந்தனர்.