Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பொறியாளர் வீட்டில் 60 பவுன் கொள்ளை உ.பி., வாலிபர்கள் இருவர் கைது

பொறியாளர் வீட்டில் 60 பவுன் கொள்ளை உ.பி., வாலிபர்கள் இருவர் கைது

பொறியாளர் வீட்டில் 60 பவுன் கொள்ளை உ.பி., வாலிபர்கள் இருவர் கைது

பொறியாளர் வீட்டில் 60 பவுன் கொள்ளை உ.பி., வாலிபர்கள் இருவர் கைது

ADDED : ஜூலை 11, 2024 06:18 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் பொறியாளர் ரமேஷ் வீட்டில் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 60 பவுன் நகை ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து 9 பவுனை மீட்டுள்ளனர்.

திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பொறியாளர் ரமேஷ். மகளின் திருமணத்திற்காக 60 பவுன் நகை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். குடும்பத்தோடு ஜூன் 22ல் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள் வந்த போது கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 60 பவுன் நகை ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. எஸ்.பி.,பிரதீப்,மேற்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விசாரணையில் வடமாநில வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ.,வீரபாண்டி தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை பிடிக்க உத்தரபிரதேசம் சென்றனர். அங்கு 15 நாள் தங்கி கொள்ளையர்களை தேடிய நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சித்தேந்தர்35,மனோஜ்குமார்28, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 பவுன் நகையை மீட்டனர்.

விசாரணையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த விஜய் திண்டுக்கல்லில் துணிகள் விற்பது போல் வீட்டின் அடையாளத்தை கொள்ளையர்களுக்கு காண்பித்து மூளையாக செயல்பட்டது தெரிந்தது. அதன்படி அவரையும் போலீசார் தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us