ADDED : ஜூலை 11, 2024 06:18 AM
திண்டுக்கல்: அடியனுாத்து வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ்39. சின்னாளப்பட்டி பாரதி நகர்பகுதியிலிருந்து வேனில் ரேஷன் அரிசியை கடத்தி வந்தார்.
மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் சாம்ராஜ் வேகமாக ஓட்டினார். போலீசார் வேனை மடக்கி சாம்ராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து 1100 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.