Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு பரிசு

அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு பரிசு

அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு பரிசு

அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு பரிசு

ADDED : ஜூலை 25, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
வடமதுரை: வடமதுரை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நகர தி.மு.க., சார்பில் பரிசு, கேடயம் வழங்கும் விழா நடந்தது.

வடமதுரை தி.மு.க., நகர செயலாளர் கணேசன் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கேடயம், ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

தலைமை ஆசிரியர்கள் காந்திமதி, சாலமன்ஜேசுராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் பிரான்சிஸ்ஆரோக்கியராஜ், தேவி, தி.மு.க., நகர துணைச் செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளிராஜன், வார்டு செயலாளர் கண்ணன் பங்கேற்றனர். பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வு ஆசிரியை இந்திராணியும் 10ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்ற 4 மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us