/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மயானத்தில் இல்லை வசதிகள்; இறுதி சடங்கின்போது தவிப்பு மயானத்தில் இல்லை வசதிகள்; இறுதி சடங்கின்போது தவிப்பு
மயானத்தில் இல்லை வசதிகள்; இறுதி சடங்கின்போது தவிப்பு
மயானத்தில் இல்லை வசதிகள்; இறுதி சடங்கின்போது தவிப்பு
மயானத்தில் இல்லை வசதிகள்; இறுதி சடங்கின்போது தவிப்பு

இன்னல்களை சந்திக்கிறோம்
பி. ஆண்டிச்சாமி, விவசாயி, மூங்கில்பட்டி: மூங்கில்பட்டி பல ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் பெரிய கிராமம் ஆகும். பல ஆண்டுகளாக மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இறுதி சடங்கை கூட செய்ய முடியாது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். மயான அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை வைத்தும் யாரும் செவி சாய்க்காதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
மின் வசதி இல்லை
ஏ.அப்துல் காதர் அம்பலம், தொழிலதிபர், நத்தம்: மயானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. விபரீதங்கள் நிகழும் முன் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் வசதி இல்லாமல் மக்கள் அவதி அடைகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
எங்கும் சீமை கருவேலம்
கோபிநாத், பா.ஜ., தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர், மூங்கில்பட்டி: மூங்கில்பட்டி மயானத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மயானத்திற்குள் எங்கு பார்த்தாலும் சீமை கருவேலம் ஆக்கிரமித்துள்ளது. இறுதிச் சடங்குகள் செய்ய தண்ணீர் வசதியும் இல்லை. மின்சார வசதியும் இல்லை. உறவினர்களை இழந்து பெரும் சோகத்துடன் வரும் மக்களுக்கு இறுதிச் சடங்கை கூட செய்ய பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை உள்ளது.