ADDED : ஜூலை 14, 2024 06:52 AM
வடமதுரை : வடமதுரை பி.கொசவபட்டி கிழக்கு காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் 45.
வீட்டு அருகில் நடந்து சென்ற போது பாதையில் நின்ற மாரியப்பனை 40 , ஓரமாக ஒதுங்கி நிற்க சொன்னார். ஆத்திரமடைந்த மாரியப்பன், தனது மனைவி பழனியம்மாள் 30, உறவினர் செந்தில் 38, ஆகியோருடன் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கினார். மாரியப்பனை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார். மற்ற இருவரையும் தேடுகின்றனர்.