/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி
குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி
குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி
குடகனாறு ஆற்றுப்பகுதியில் சீ(தீ)மை கருவேலம் ஆடு, மாடுகள் கூட இறங்க முடியாத நிலையில் வளர்ச்சி

நீதிமன்றத்தை நாடுவோம்
த.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர், வேடசந்துார்: குடகனாறு மட்டுமின்றி அதன் உப ஆறுகளான சந்தனவர்த்தினி ஆறு, மாங்கரை ஆறு, வரட்டாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கருவேலன் முட்கள் நிறைந்து காணப்படுகிறது.ஆறு என்பதே தெரியாத அளவிற்கு முள் மர காடாக காட்சியளிக்கிறது. குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் 3 கி.மீ., துாரத்திற்கு 2023ல் முட்களை அகற்றி விட்டோம். தற்போது அதே இடத்தில் மீண்டும் முட்கள் நன்கு வளர்ந்து விட்டது.
தண்ணீர் செல்ல வழி இல்லை
எம்.சக்திவேல், மரம் வியாபாரி, ஆத்துப்பட்டி, தாடிக்கொம்பு : குடகனாறு முழுக்க கருவேல முட்கள் தான் நிறைந்துள்ளது. ஆற்றுப் பகுதியில் ஆடு, மாடு மேய்க்க கூட வழியில்லை. இடைப்பட்ட பகுதியில் ஆற்றைக் கடந்து யாரும் மறுபக்கம் செல்ல முடியாது. மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கூடுதலான நீர் வரத்து வந்தாலும் தண்ணீர் முறையாக செல்ல வழி இல்லை. 1977 ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை போல் மீண்டும் ஒரு முறை கூடுதலான தண்ணீர் வந்தால் பல இடங்களில் பாதிப்பு ஏற்படும். அதற்கு முன்கூட்டியே ஆற்றில் உள்ள கருவேல முட்களை அகற்ற வேண்டும். நீர்வரத்து பாதைகள் சரியாக இருந்தால் தான் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். மக்கள் நலன் கருதி கருவேல முட்களை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும் .
சட்டசபையில் குரல் கொடுங்க
எஸ்.ஆறுமுகம், சமூக ஆர்வலர், பாளையம்: ஆற்றுப்பகுதி மட்டுமின்றி குளங்கள், வரத்து கால்வாய்கள் என ஒட்டுமொத்தமாக கருவேல முட்களை அகற்ற வேண்டும்.