ADDED : ஜூலை 10, 2024 04:54 AM
திண்டுக்கல், : காங்., மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகையை அவதுாறாக பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திண்டுக்கல் மாநகர காங்., சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன், மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் முகமது அலியார், பகுதி செயலாளர்கள் அப்பாஸ் மந்திரி, அபுதாகிர், நாகலட்சுமி, அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் அப்புறப்படுத்தினர். மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.