ADDED : ஜூலை 21, 2024 05:19 AM
நத்தம்: முளையூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் 55.
தனது தோட்டத்தில் கோழிகள் வளர்த்து வருகிறார். ஜூலை 18- இரவு கோழிகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது 7 கோழிகள் இறந்து கிடந்தது. கோழிகள் விஷம் வைத்து கொல்லப் பட்டிருப்பதாகவும், எதிர் வீட்டுகாரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக நத்தம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.